2009/11/5 Venkatachalam Subramanian <v.dotthusg@gmail.com>
ஓம்.
பேரன்புடையீர்!
திருவாளர் மறவன்புலவு கே.சச்சிதானந்தம் அவர்களின் மடலைக் காண்க:
பன்னிறு திருமுறைகளை இந்த தளத்தினில் காணலாம்.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்


---------- Forwarded message ----------
From: Maravanpulavu K. Sachithananthan <tamilnool@gmail.com>
Date: 2009/11/5
Subject: [MinTamil] திருமுறைகள் இந்தியில்
To: "Subramanian, Nagarajan (Subra IPD)" <Subra.N@fmcti.com>


வணக்கம்.
திருமுறைகளையும் மெய்கண்ட சாத்திரங்களையும் இந்தி மொழிக்கு மொழிபெயர்க்கும் முயற்சி, கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகிற தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.

காசிப் பல்கலைக் கழகத்தில் சிவஞானபோதம் இந்தி மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. அதனைத் தேவாரம் மின்னம்பல தளத்தில் சேர்க்க ஆவன செய்துள்ளேன். தட்டச்சாகி வருகிறது.

திருமந்திரம் முழுவதையும் 1997இல் வார்தாவில் காந்தி ஆச்சிரமத்தார் இந்தி மொழிபெயர்ப்பாக வெளியிட்டனர்.

திருமுறைகள் முழுவதையும் மொழிபெயர்க்குமாறு கொல்கத்தா, சாந்திநிகேதனத்தார் 1995இல் சென்னையில் இருந்து பேரா. சுந்தரத்தை அழைத்து, கொல்கத்தாவில் 3 ஆண்டுகள் தங்கவைத்தனர். அவர்,1,4,5,6,7,8 (திருவாசகம்) திருமுறைகளை இந்திக்கு மொழிபெயர்த்தார். அவரை அழைத்த பேராசிரியர் காலமாகிவிடவே, பிறர் ஆர்வம் காட்டாத நிலையில் அவர் சென்னை திரும்பினார். 

திருவாச இந்தி மொழிபெயர்ப்பை அக்காலத்தில் சாந்திநிகேதன் வெளியிட்டது. 

சுந்தரர் தோவாரத்தை வார்தா காந்தி ஆச்சிரமம் வெளியிட்டது. 

4,5,6 திருமுறைகளை பாடலிபுரப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

1 திருமுறை கையெழுத்துப் படியாக உள்ளது.

11ஆம் திருமுறை திருமுருகாற்றுப்படையைத் திரு பாலசுப்பிரமணியம் செய்து வைத்திருக்கிறார்.

அருட்செல்வர் நா. மகாலிஙகம் பெரிதும் முயன்று, வண்ணப் படம் ஒரு பக்கம் கதை ஒரு பக்கம் வந்த பெரியபுராணம் நூலை இந்தியிலும் பலவேறு மொழிகளிலும் பதிப்பித்துள்ளார்.

பேரா. இரபீந்திரநாதர் சேத்து என்பர் மூலம் திருமுறைகளில் தேர்ந்த பாடல்களை இந்திக்கு மொழிபெயர்க்க, பல தொகுதிகாளாக அருட்செல்வர் நா. மகாலிங்கம் பதிப்பித்துள்ளார். அந்தப் பதிப்பை அக்காலத்தில் குடியரசுத் தலைவர் வெளியிட்டார்.

இவை எனக்குத் தெரிந்த தகவல். வேறு தகவல் தெரிந்தோர் சொல்லியுதவுக.

மகிழ்ச்சியான செய்தி என்னவெனில், 1, 4, 5, 6 ,7 8 (திருவாசகம்), 10 ஆகிய திருமுறைகளின் இந்தி மொழிபெயர்ப்பு விரைவில் www.thevaaram.org  தளத்தில் ஏறும். 1, 8, 10 ஆகியனவின் எணினிப் படி இல்லை. 4,5,6,7 களுக்கு எண்னிப் படி உண்டு. எணினிப் படி இல்லாதனவற்றை எணினியாக்குகிறேன்.
  
இப்பணிகளுக்கான செலவுகளை நன்கொடையாளர்களாகிய சிவனருட்செல்வர்கள் ஏற்று வருகிறீர்கள்.

நன்றி
 

--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan

--~--~---------~--~----~------------~-------~--~----~
 "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
-~----------~----~----~----~------~----~------~--~---



Meenakshi Amman Temple

Sunday, November 1, 2009


> Pl use the arrows
> for 360 degree-view
>
>
> http://www.view360.in/virtualtour/madurai/
>
>
auvvm.V.Subramanian Aum

Aum
V.Subramanian
படிக்கவும்


செம்மொழி மாநாட்டில் அரசியல் வேண்டாம்!

'இலங்கை தமிழறிஞரும் பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பி செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வாரா... மாட்டாரா?' என்பதுதான் தமிழகத்தில் பரபரப்பு விவாதமாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இலங்கை தெகிவல பகுதியில் வசிக்கும் 77 வயதான சிவத்தம்பியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்:

''கோவையில் நடக்கவுள்ள உலகத் தமிழ் மாநாட்டுக்கு உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் ஏன் அனுமதி வழங்க வில்லை?''

''உலகத்தில் எங்கு உலகத் தமிழ் மாநாடு நடந்தாலும் உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்திடம் முன்கூட்டியே தெரிவித்து, அவர்களுடன் இணைந்து நடத்துவதுதான் வழக்கம். தற்போது அந்த கழகத்துக்கு நெபுரூ கரோஷிமா தலைவராக இருக்கிறார்.அமைப்பின் செயலாளர்களில் ஒருவராக நான் இருக்கிறேன். இந்தியப் பிரிவு தலைவராக வா.செ.குழந்தைசாமி இருக்கிறார். தமிழக முதல்வர் கலைஞர் மாநாட்டை முதலில் பிப்ரவரி மாதம் நடத்துவோம் என அறிவித்தபோது, 'இவ்வளவுகுறைவான நேரத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்க முடியாது!' என உலகத் தமிழறிஞர்கள் கருதினர். அதனால்தான் மாநாட்டை 2011-ம் வருடம் ஜனவரி மாதம் நடத்தும்படி கரோஷிமா கூறினார்.

ஆனால், தமிழகத்தில் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வைத்து அவ்வளவு காலம் தள்ள முடியாது என கலைஞர் கருதுவதாகத் தெரிவித்தார். ஆனாலும் கரோஷிமா சில விஷயங்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டினார். ஆகவே, ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரனிடம் உலகத் தமிழ் மாநாடு என்பதற்கு பதிலாக உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என நடத்தலாம் என்ற என் எண்ணத்தைச் சொன்னேன். அதன்படியே அந்த மாநாடு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டில் நெபுரூ கரோஷிமாவும் கலந்துகொள்வார் என நம்புகிறேன்.''

''இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதி நடந்துகொண்ட விதம் திருப்தி அளிக்காததால், மாநாட்டில் நீங்கள் கலந்துகொள்ளப் போவதில்லை என செய்திகள் வெளியாகியிருக்கிறதே....?''

''முதலில், இந்த விவகாரம் தொடர்பாக நான் தெரிவித்த கருத்துகள் சற்றுத் தவறான கண்ணோட் டத்தில் பார்க்கப்பட்டது. நானும் சில கருத்துகளை லேசான தடுமாற்றத்துடன் தெரிவித்தேன். இப்போது ஜூ.வி-க்கு நான் சொல்லும்


விஷயங்களை, கோவை உலக செம்மொழித் தமிழ் மாநாடு தொடர்பான என் தெளிவான, இறுதியான, உறுதியான நிலைப்பாடாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்...

கடந்த ஒன்பது ஆண்டுகளில் சர்வதேச அளவில் தமிழுக்காக மாநாடு நடக்காத நிலையில், அதிலும் தமிழ் செம்மொழி ஆன பிறகு இந்த மாநாடு நடப்பதை மகிழ்வுடன் வரவேற்கிறேன். அதோடு, மாநாட்டில் கலந்துகொள்ளும் ஆர்வமும் எனக்கிருக்கிறது. என் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு பார்க்கையில்,அதில் கலந்துகொள்வது குறித்து உடனே என்னால் தெரிவிக்க இயலாது. உரிய நேரத்தில் என் முடிவைத் தெரிவிப்பேன். இதில் சிலர் தங்களுடைய ஆசைகளையும் எண்ணங்களையும் என் மேல் திணிக்க முயல்கிறார்கள். நான் தமிழை நேசிப்பவனே தவிர, அரசியலை அல்ல.''

''மாநாட்டுக்கு தங்களை வரவிடா மல் தடுக்க சில ஆதிக்க சக்திகள்முயல் வதாக கருணாநிதி சொல்லியிருக்கிறாரே?''

(பலமாகச் சிரிக்கிறார்...) ''இதில் கலைஞர் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். அவர் என்னை மாநாட்டுக்கு வரவேண்டுமென அழைப்பு விடுத்திருக்கிறார். நானும் பரிசீலிப்பதாகச் சொல்லி யிருக்கிறேன். மற்றபடி, நான் மாநாட்டுக்கு வருவதை தடுக்க சில சக்திகள் விரும்புவதாகச் சொல்லப்படும் அரசியலுக்குள் நான் வர விரும்பவில்லை. அரசி யல் வேறு, தமிழ்மொழி வேறு. இரண்டையும் கலக்கவேண்டாம். நான் மாநாட்டுக்கு செல்ல முடிவெடுத்து விட்டால், என்னை யாராலும் தடுக்க முடியாது!''

''கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் என்னென்ன விஷயங்கள் விவாதத்தில் இடம்பெற வேண்டும்?''

''இந்த மாநாட்டில் பல முக்கிய விஷயங்கள் உள்ளன. செம்மொழி பற்றிய கொள்கைகள்... குறிப்பாக, தமிழ் செம்மொழி ஆன பிறகு அதற்கான கொள்கை வரைவு செய்யப் பட வேண்டும். சைனீஸ், கிரீக், சம்ஸ் கிருதம், லத்தீன், ஹீப்ரு போன்ற உலகச் செம்மொழிகளின் கொள்கைகளை ஆராய்ந்து, அவற்றுடன் செம்மொழி தமிழை ஒப்பிட்டு... கொள்கைகள் வரைவு செய்யப்பட வேண்டும். இந்திய மொழி வம்சம் பற்றிய அறிமுகங்களோடு, சுமேரிய மொழியும் தமிழும்,ஜப்பானிய மொழியும் தமிழும் போன்ற விஷயங்களும் ஆராயப்பட வேண்டும். இந்தோ - ஆரியன், இந்தோ - ஆரியன் - திராவிடன் போன்ற கலாசாரங்களும் ஆய்வு செய்யப்பட வேண்டும். மருத்துவம், வானியல் மற்றும் ஜோதிடத்தில் செம்மொழியாக தமிழ் பயன்படும் விதம், தமிழகத்தில் ஆட்சிமொழியான தமிழ், இலங்கையில் தமிழ், மலேசியா - சிங்கப்பூர் - தென்னாப்பிரிக்காவில் தமிழின் வளர்ச்சி நிலை, மேற்கத்திய நாடுகளில் சமகால மொழியாக இருந்த தமிழைப் பற்றிய ஆய்வுகள் ஆகியவை நடத்தப்படவேண்டும். இவைதான் செம்மொழி யான தமிழை இன்னும் பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஜொலிக்கச் செய்யும்!''

''இலங்கையில் தமிழர் கள் முள்வேலிக்குள் கடும் அவதிப்படும் சூழலில் இந்த மாநாடு எந்தளவு அவசியம்?''

''உலக நாடுகள் மற்றும் ஐ.நா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் முள்வேலி அவதி பற்றி வருத்தம் தெரிவித்திருக்கின்றன. தமிழர்கள் விரைவில் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் என் எண்ணம். தமிழ் மொழி மாநாடு என்பது, தமிழுக்கான கௌரவம். எனவே, இந்த விஷயத்தையும் தமிழ் மொழி மாநாட்டையும் இணைத்துப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.''

''இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தனக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரை துடைக்கவே இந்த நேரத்தில் செம்மொழி மாநாட்டை கருணாநிதிநடத்துவதாக தமிழர் அமைப்புகள் குற்றம் சாட்டு கின்றனவே?''

''இம்மாநாடு அரசியலைத் தாண்டியதாகும். இதற்கு அரசியல் சாயம் பூச முயலக் கூடாது. அதை விடுத்து தமிழ் மொழி பற்றிய சீரியதோர் மாநாட்டினை அரசியலாக்கி, அதற்குக் களங்கம் கற்பிப்பது அழகல்ல..!'

நன்றி: ஜூனியர் விகடன் 04 11 09

இன்னம்பூரான்


எட்டுத் தொகை நூல்கள்
பத்துப்பாட்டு நூல்கள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
கம்பரின் படைப்புகள்
ஐம்பெருங் காப்பியங்கள்
ஐஞ்சிறு காப்பியங்கள்

திருஞானசம்பந்தரின் படைப்புகள்
திரிகூடராசப்பரின் படைப்புகள்
ஸ்ரீகுமரகுருபரரின் படைப்புகள்
சைவ சித்தாந்த நூல்கள்
மெய்கண்ட சாத்திரங்கள்
முருக பக்தி நூல்கள்
ஔவையாரின் படைப்புகள்
நீதி நூல்கள்
இலக்கண நூல்கள்

மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகள்
பேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரையின் படைப்புகள்
சிறுகதைகள்
புதினங்கள்

கட்டுரை நூல்கள்

டாக்டர் மு.வரதராசனாரின் படைப்புகள்
புதினங்கள்
சிறுகதைகள்
ந.பிச்சமூர்த்தியின் படைப்புகள்
சிறுகதைகள்



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ebooks/ebooks.html

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க


-=-=-=-=-=-=-=-=-=-=-=
ஓம்.
தமிழ் நூல்கள் தேவைக்கு இறக்கம் செய்துகொள்ள
நன்றி, சென்னைலைப்ரரி.டாட்.காம்
வெ.சுப்பிரமணியன் ஓம்.

Fwd: K.B.Sundarambal...

Wednesday, October 28, 2009


Courtesy: Srinivasan S

Subject: K.B.Sundarambal...


Aum.V.Subramanian Aum


Kodumadi Balambal Sundarambal  (1908-1980) was a renowned stage artist and singer of South India. She was popularly referred to as the "Queen of the Indian stage."  She was noted both for her resonant, vibrant voice and for the dignity of her performances. A political activist during the Indian independence movement, K.B. Sundarambal was the first film personality to enter a state legislature in India.

?ui=2&view=att&th=12496d39c57091fe&attid=0.1&disp=attd&realattid=ii_12496d39c57091fe&zw


Whilst returning from Trichy on 26th night.... where the bus stopped for TEA/COFFEE... i found a CD with good collection of songs of her.... thus the link for downloading those songs...

in my mediafire account, i have created a folder KBSundarambal with 9 sub-folders.

  • Devotional-1  ==>> 9 songs.
http://www.mediafire.com/?sharekey=ff6ccf9d6cdacfcd8ef1259ff1b60e8128cea5b521dcf5d79b20786b9a6e1ed0
  • Devotional-2  ==>> 6 songs.
http://www.mediafire.com/?sharekey=ff6ccf9d6cdacfcd8ef1259ff1b60e8128cea5b521dcf5d716f8cf40558950b4
  • Devotional-3  ==>> 4 songs.
http://www.mediafire.com/?sharekey=ff6ccf9d6cdacfcd8ef1259ff1b60e8128cea5b521dcf5d7daada8390b259c5f

  • Devotional-4  ==>> 10 songs.
http://www.mediafire.com/?sharekey=ff6ccf9d6cdacfcd8ef1259ff1b60e81c1bac886e4d622b492595bc19e6628dc
  • Devotional-5  ==>> 10 songs.
http://www.mediafire.com/?sharekey=ff6ccf9d6cdacfcd8ef1259ff1b60e81c1bac886e4d622b43e34c0a955f98962
  • KBS-Avvayar-Karaikkal Ammayar  ==>> 17 songs.
http://www.mediafire.com/?sharekey=ff6ccf9d6cdacfcd8ef1259ff1b60e81c1bac886e4d622b43e34c0a955f98962
  • KBS-Hits  ==>> 11 songs.
http://www.mediafire.com/?sharekey=ff6ccf9d6cdacfcd8ef1259ff1b60e814481d7a4359f3014935cbde7375ca78c
  • KBS-Live  ==>> 3 songs.
http://www.mediafire.com/?sharekey=ff6ccf9d6cdacfcd8ef1259ff1b60e81c1bac886e4d622b4759e682a8cd2154a
  • KBS-Pazhamneeyappa  ==>> 14 songs.
http://www.mediafire.com/?sharekey=ff6ccf9d6cdacfcd8ef1259ff1b60e81c1bac886e4d622b4935cbde7375ca78c


hope the recording is good and you all will enjoy.

though
Thanks to
cheenu@coimbatore
09360069227
==========================
SADSANGATHWE NISSANGATHWAM, NISSANGATHWE NIRMOHATHWAM, NIRMOHATHWE NISCHALA THATHWAM, NISCHALA THATHWE JEEVANMUKHTHI:




2009/10/22 Venkatachalam Subramanian <v.dotthusg@gmail.com>
சித்தர்கள் வாக்கில் பழமொழிகள்..
 




 

சித்தர் வாக்கில் பழமொழிகள்.


 

 ஓம்

சித்தர் பழமொழிகள்.

சித்தர்கள் தனியாகப் பழமொழிகள் ஏதும் பாடியவரல்லர். பதினெண் சித்தர்கள் பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்டவைகளை அன்பர் சி.எஸ். முருகேசன் தொகுத்தளித்திருக்கிறார்.

  1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.
  2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
  3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.
  4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்.
  5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்.
  6. உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்
1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.

உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.

2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.

உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.

3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.

சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.

4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்

மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா  அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

5. புணர்ந்தன  பிரியும், பிரிந்தன புணரும்.

ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.

6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம்

விரும்பிப் போனால் விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா?

பட்டினத்தார் திருப்பாடல் திரட்டு
--------------------------------------------------
கோயில் திரு அகவல்--1.
~~~~~~~~~~~~~~~~~
நினைமின் மனனே! நினைமின் மனனே
சிவபெருமானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!
அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப் பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க!

பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்.

அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம் வெறுப்பன வுவப்பாம்
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை அன்றியும்
பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்
கொன்றனை அனைத்தும், நினைக் கொன்றன.


ஓம். அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்.